Saturday, February 8, 2025
HomeLocal Newsமாவீரர் தினம் குறித்த ஜனாதிபதியின் அறிக்கை போலியானது?

மாவீரர் தினம் குறித்த ஜனாதிபதியின் அறிக்கை போலியானது?

president report about maveerar thinam fake news 3464

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தங்களின் உறவுகளை அமைதியாக நினைவு கூறுவதற்கு நியாயமான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது என அரசாங்க தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு போரின் உயிரிழந்த மாவீரர்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் பலி!

தழிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்!

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் விவகாரம் சர்ச்சையில்!

president report about maveerar thinam fake news 3464

எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த ஆண்டு தொடக்கம் அவ்வாறு எந்தவித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கை தொடர்பாக அரசாங்க தரப்பு எந்தவித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

குறித்த இவ் அறிக்கை போலியானது என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

president report about maveerar thinam fake news 3464
இதையும் படியுங்கள்

பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!

பசறை – பிபில வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

பசறை - பிபில வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஒரே குடும்பம் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

ஒரே குடும்பம் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular