Monday, February 10, 2025
HomeTop Storyஅசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?

அசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?

background to ashoka ranwalas resignation 4080

சபாநாயகர் அசோன ரன்வல நேற்று வெள்ளிக்கிழமை தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கலாநிதி பட்டத்தை பெறாது கலாநிதியென தம்மை அசோக ரன்வல அடையாளப்படுத்திக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பூதாகரமானதன் பின்புலத்திலேயே அவர் தமது பதவியை துறந்துள்ளார்.

அசோக ரன்வல கலாநிதி இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் காதுகளுக்கு செய்தி சென்ற உடனேயே அவர் உடனடியாக இதுதொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் அசோக ரன்வலவிடமும் வினவியுள்ளதாக தெரியவருகிறது.

கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டமைக்கான சான்றுகள் அசோக ரன்வலவிடம் இல்லை என்பதால் ஜனாதிபதி அதிருப்தியுற்றுள்ளதாகவும் பின்னர் அவரை பதவி துறக்குமாறும் கோரியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தப் பின்புலத்தில்தான் அரச ஊடக பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பில், அரசாங்கத்தில் தவறு செய்பவர்கள் எந்த பதவியை வகித்தாலும் அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஜனாதிபதியின் எச்சரிக்கை வெளியாகிய சில மணித்தியாலத்திலேயே தமது பதவி துறப்பு அறிவிப்பை அசோக ரன்வல வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபாநாயகராக அசோக ரன்வல நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டிருந்த தினத்தன்று கலாநிதி அசோக ரன்வல என்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விழித்திருந்தார். என்றாலும், அசோக ரன்வல கலாநிதி என்ற குறிப்புடன் தமது தகவல்களை நாடாளுமன்றத்துக்கு வழங்கியிருந்ததன் பின்புலத்லேயே பிரதமர் அவரை கலாநிதி என விழித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

background to ashoka ranwalas resignation 4080

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

கொப்பரை தேங்காய் இல்லாததால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வியாபாரம்!

தந்தை வெட்டிய மரம் வீழ்ந்து மகன் உயிரிழப்பு!

தாய்லாந்தில் பதக்கங்கள் வென்ற 7 வயது மாணவி!

வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? – ஓர் ஆய்வு

இந்தியாவின் பொருளாதாரம்

பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தது? – அந்த பணம் இனி என்னவாகும்?

பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர் கடன் கொடுத்தது?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular