Friday, April 25, 2025
HomeLocal Newsஶ்ரீரங்காவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

ஶ்ரீரங்காவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் அரசாங்கத் சட்டத்தரணி ஜாகொட ஆராச்சி முன்வைத்த காரணங்களை பரிசீலினைக்கு எடுத்து கொண்ட பின்னரே முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் , முன்பிணை கோரி ஸ்ரீ ரங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவுக்கு எதிரான் மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

Most Popular