Thursday, March 13, 2025
HomeIndian Newsஎஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி: வழக்கின் பின்னணி என்ன?

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி: வழக்கின் பின்னணி என்ன?

sv sekar sentenced one month prison 4790

பெண் பத்திரி​கை​யாளர்​களுக்கு எதிராக சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​வித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்​கப்பட்ட ஒருமாதசிறை தண்டனையை உயர் நீதி​மன்றம் உறுதி செய்தது.

2018-ம் ஆண்டு பெண் பத்திரி​கை​யாளர்கள் குறித்து தரக்​குறைவாக விமர்​சிக்​கப்​பட்ட பதிவை பாஜக முன்​னாள் பிரமுகரும், நடிகருமான எஸ்.​வி.சேகர் தனது முகநூல் பக்கத்​தில் பகிர்ந்​திருந்​தார். அதையடுத்து அவர் மீது பெண்​களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கக்​கோரி தமிழ்​நாடு பத்திரி​கை​யாளர் பாது​காப்பு சங்கச் செயலா​ளரான மிதார் மொய்​தீன் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் எஸ்.​வி.சேகர் மீது சென்னை மத்திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்​களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச்​சட்டம் என 4 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதேபோல நெல்​லை​யிலும் எஸ்.​வி.சேகர் மீது வழக்​கு ​ப​தி​யப்​பட்​டது. இந்த வழக்​கு​களில் முன்​ஜாமீன் கோரி எஸ்.​வி.சேகர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்திருந்​தார். அப்போது சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​விப்பதை வாடிக்கையாக வைத்​துள்ள எஸ்.​வி.சேருக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூடாது என பெண் பத்திரி​கை​யாளர்கள் மற்றும் பெண் வழக்​கறிஞர்கள் சங்கத்​தினர் தரப்​பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து, எஸ்.​வி.சேகருக்கு முன்​ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதி​மன்​றம், இந்த விவகாரத்​தில் எஸ்.வி. சேகருக்கு எவ்வித பாரபட்​ச​மும் காட்​டக்​கூடாது என 2018-ம் ஆண்டு அப்போதைய அரசுக்கு உத்தர​விட்​டது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.​வி.சேகர் தாக்கல் செய்திருந்த முன்​ஜாமீன் மனுவை உச்ச நீதி​மன்​ற​மும் தள்ளுபடி செய்​தது. அதன்​பிறகும் எஸ்.​வி.சேகர் கைது செய்​யப்​பட​வில்லை என்ப​தால் உயர் நீதி​மன்​றத்​தில் அவமதிப்பு வழக்கு தொடரப்​பட்​டது. அதேபோல இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி எஸ்.​வி.சேகர் தரப்​பில் தாக்கல் செய்​யப்​பட்ட மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருக்கு எதிரான வழக்கை 6 மாதத்​தில் விசா​ரித்து முடிக்க சென்னை​யில் உள்ள எம்.பி., எம்எல்​ஏ-க்கள் மீதான வழக்​குகளை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு கடந்த 2023-ம் ஆண்டு உத்தர​விட்​டது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது… ஆணைக்குழு கவனம் செலுத்துகிறது!

தீவிர சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு!2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!

2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!

அதன்படி இந்த வழக்கை விசா​ரித்த சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஜி.ஜெய​வேல் கடந்​தாண்டு பி்ப்​ர​வரி​யில் பிறப்​பித்த உத்தர​வில், எஸ்.​வி.சேகருக்கு எதிரான குற்​றச்​சாட்டுகள் அரசு தரப்​பில் சரிவர நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. தனக்கு வந்த பதிவை அப்படியே பார்​வர்டு செய்​தேன் என்றும், தான் குற்​றமற்​றவன் என்றும், இதற்காக மன்னிப்பு கோரு​கிறேன் என்ற அவரது தரப்பு வாதத்தை ஏற்க முடி​யாது. எனவே எஸ்.​வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்​கிறேன் என தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய​வுள்ளதாக தெரிவிக்​கப்​பட்​ட​தால் ஒரு மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இந்நிலை​யில் தனக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.​வி.சேகர் தாக்கல் செய்திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முரு​கன், நேற்று பிறப்​பித்​துள்ள உத்தர​வில், ‘‘சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​விப்பதை மனுதாரர் வாடிக்கையாக வைத்​துள்ளார் என்றும், அவர் ஒன்றும் எழுத, படிக்கத் தெரி​யாதவர் அல்ல என்றும், எம்எல்​ஏ-வாக பதவி வகித்​தவர் எனவும் தெரிவிக்​கப்​படும் அரசு தரப்பு வாதம் ஏற்கத்​தக்​கது. எனவே எஸ்.​வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதி​மன்றம் பிறப்​பித்த உத்தரவை உறுதி செய்​கிறேன் என கூறி மேல்​முறை​யீட்டு மனுவை தள்ளுபடி செய்​தார்.

ஏற்கெனவே முன்​னாள் முதல்வர் பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரி​வித்​தும், தேசியக் கொடியை அவமதிக்​கும் வகையிலும் சர்ச்​சைக்​குரிய வீடியோ வெளி​யிட்​டதாக 2020-ம் ஆண்டு எஸ்.​வி.சேகருக்கு எதிராக பதியப்​பட்ட வழக்கை உயர் நீ​தி​மன்​றம் ரத்து செய்தது குறிப்​பிடத்​தக்​கது. அதேபோல பாஜக​வில் இருந்து ​கொண்டே ​மாநில தலை​வரான அண்ணாமலை உள்​ளிட்​டோரை ​விமர்சித்து வந்த எஸ்​.​வி.சேகர், தற்​போது பாஜக​வில் இல்​லை என்​பதும்​ குறிப்​பிடத்​தக்​கது.

sv sekar sentenced one month prison 4790

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித!

CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித!

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular