Student dies while taking exam in Kalpitiya 5363
புத்தளம், கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெறவிருந்த செயல்முறை திறன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, ஆஸ்துமா (வீசிங்) எனும் நோயினால் அவதிப்பட்டு வந்த குறித்த மாணவன் நேற்று பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் திடீரென ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மாணவன் ஆஸ்துமா நோய்க்காக பயன்படுத்தும் இன்ஹேலர் எனும் இயந்திரத்தை பாவித்துள்ள போதிலும், தனக்கு மூச்சு எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் குறித்த மாணவனை மாம்புரி கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அந்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Student dies while taking exam in Kalpitiya 5363
இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்
