srilankan monkey international headlines 5919
இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது.
இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது.
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது.

முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
எவ்வாறெனினும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர்.
படிப்படியாக மின்சாரம் நேற்று மாலையாகும் போது வாமைக்கு கொண்டு வரப்பட்டது.
10 நாட்களில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் புதிய திட்டம் ஆரம்பம்!
சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்!
இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!
வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் – காரணம் இதுதான்!
இந்த நிலையில் மின் துண்டிப்பின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை தூண்டியிருந்ததுடன், பல்வேறு நாடுகளின் பிரதான தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தது.
அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
srilankan monkey international headlines 5919


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
சர்வதேச ரீதியில் சீகிரியாவிற்கு முதலிடம்
