Friday, May 30, 2025
HomeLocal Newsஉயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

heartfelt request to the president 4824

பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளின் உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை சேர்ந்த பெற்றோரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இவர்களின் இரு மகள்களும் வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாகச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டினால் இவர்கள் இருவரும் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில் 22 வயதான யுவதி ஓமானில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த யுவதியின் 24 வயதான மூத்த சகோதரி துபாயில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணிப்பெண்களாக சென்ற இரண்டு யுவதிகளும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும், ஊதியம் வழங்காமல் தனித்தனி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இரண்டு யுவதிகளும் இலங்கையில் உள்ள தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தங்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய அவர்களது பெற்றோர் சென்றிருந்த போதிலும், முறைப்பாட்டை ஏற்க பணியகம் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மகள்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சுமார் எட்டு லட்சம் வரை செலவாகும் என பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.

இபெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்ய வந்த போது சமுர்த்தி உத்தியோகத்தர் வீட்டிற்கு வந்து ஏன் இவ்வாறு முறைப்பாடு செய்தீர்கள் என வினவியதுடன் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் கடமையாற்றும் நபர் எனவும், சில காலமாக துபாய், ஓமான், போன்ற நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் திட்டங்கள்!

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்!

லாஃப் எரிவாயு விலை திருத்தம் திங்களன்று!

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்ததன் பேரில், தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம் என, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், 24 வயதான மூத்த மகள் தன்னை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சுசி கிராமத்தில் தகரங்களாலான சிறிய வீட்டில் அந்த குடும்பம் வாழ்ந்து வருவதாகவும், உயிரிழந்த மகளின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

பத்து குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

குறித்த குடும்பத்தின் தந்தை தற்போது சுகவீனமடைந்துள்ளதாகவும், யுவதிகள் இருவரும் வீடு கட்டும் நம்பிக்கையிலும் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் நம்பிக்கையிலும் வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும், ஆனால் பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

heartfelt request to the president 4824

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

சீகிரியாவில் சுற்றுலா பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

சீகிரியாவில் சுற்றுலா பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular