Thursday, July 31, 2025
HomeLocal Newsமின்சார சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு!

மின்சார சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு!

special committee review electricity act 4850

இலங்கை மின்சார சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, சட்டத்தை ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் தொடர்பான விரிவான மீளாய்வு மற்றும் ஒரு மாத காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக எரிசக்தி அமைச்சினால் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால இந்த குழுவுக்கு தலைமை தாங்குவதுடன், மின்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே குழுவின் செயலாளராக செயற்படுவார்.

இந்த குழுவின் அழைப்பாளராக எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன விஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய மற்றும் ஜானக அலுத்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் அதுல ராஜபக்ஷவும் உறுப்பினராக உள்ளார்.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் திட்டங்கள்!

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்!

லாஃப் எரிவாயு விலை திருத்தம் திங்களன்று!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி லிலந்த சமரநாயக்க, சிரேஷ்ட விரிவுரையாளர்களான துஷார ரத்நாயக்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இந்திரா மஹாகலந்த ஆகியோரும் இந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆளும் கட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, ​​முழு மின்சாரத்துறை சீர்திருத்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், போட்டி நிறைந்த சந்தைக்குள் எரிசக்தி செலவைக் குறைப்பதாக உறுதி அளித்தது.

மின்சார சட்டம் தொடர்பில் இந்தக் குழு ஆய்வு செய்து தமது அறிக்கையை சமர்ப்பித்தப் பின்னர் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

special committee review electricity act 4850

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும்…

லிட்ரோ எரிவாயு விலை குறித்த தீர்மானம்

லிட்ரோ எரிவாயு விலை குறித்த தீர்மானம்

11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது

11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular