liquor stores to be closed for two days 3076
பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள து.
இந்த நிறுவனங்களில் 04 நிறுவனங்கள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
liquor stores to be closed for two days 3076

இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
பெண் ஒருவர் கொடூரமாக கொலை – கணவன் தப்பியோட்டம்

BRICS உறுப்பினர் கோரிக்கை குறித்து ரஷ்ய தூதரகத்தின் அறிவிப்பு
