Kalasuri Arundhati Sri Ranganathan passes away 6087
இலங்கையின் இசை ஆளுமையும் ஒலி, ஒளிபரப்பாளருமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் நேற்று (17) அவுஸ்திரேலியா, சிட்னியில் காலமானார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகர், ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவராவார்.
இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக சேவையாற்றியிருந்தார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்ற பெருமையைக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kalasuri Arundhati Sri Ranganathan passes away 6087
இதையும் படியுங்கள்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!
பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப். கூறுவது என்ன?