jagath wickramaratne appointed new speaker 4202
10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவினால் அதனை வழிமொழிந்தார்.
16ஆம் திகதிக்கான வானிலை விசேட முன்னறிவிப்பு!
பொலன்னறுவையில் இருந்து அடுத்த சபாநாயகர்!
வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்!
கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!
முன்னதாக 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வாலா பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஒருவரை பரிந்துரைப்பதாக அறிவித்திருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஒருவரின் பெயரை முன்மொழியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபாவும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
jagath wickramaratne appointed new speaker 4202

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
விபத்தில் படுகாயமடைந்த யானை

ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி
