government agreed to the edca agreement 4257
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் இரு நாடுகளும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் மற்றும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ள உத்தேச திட்டங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார்.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவிலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதியின் இந்தியப் பயணம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிடவில்லை. எட்கா உடன்படிக்கையை செய்துகொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,
ஜனாதிபதியின் இந்திய பயணம் மற்றும் அங்கு பேசப்பட்ட மற்றும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை விசேட அறிவிப்பொன்றை வெளிவிவகார அமைச்சில் விடுக்க உள்ளார் என பதில் அளித்தார்.
government agreed to the edca agreement 4257

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
முக்கிய கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடா?
