Monday, February 10, 2025
HomeLocal Newsபழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்!

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்!

பழைய வேட்பு மனுவின் பிரகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தலை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது

முன்னைய வேட்புமனுக்கள் ரத்துச் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இதுவரை எந்தவொாு தௌிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வேட்பு மனுக்களின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளது.

எனினும் குறித்த வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரொருவர் மரணித்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாத்திரம் வேறு பதிலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular