Wednesday, March 12, 2025
HomeLocal Newsஇன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்!

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்!

three armed forces removed security former presidents 4383

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை!

இரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்!

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முப்படை வீரர்கள் நீக்கப்பட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

three armed forces removed security former presidents 4383

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!

கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?

மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம்

மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம்

எழுத்தாளர் கைது – பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

எழுத்தாளர் கைது - பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular