not allowed board train bus drunk 5338
சிங்கப்பூரில் குடிபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்யும் நிலையில் இல்லாதவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
குடிபோதையில் மற்ற பயணிகளுக்குத் தொல்லை விளைவிப்போர் உடனடியாகப் பேருந்து அல்லது ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.
ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் (Chee Hong Tat) நினைவுறுத்தினார்.
போக்குவரத்து நிறுவனங்கள் அவர்களுக்குக் குற்ற அறிக்கை விடுத்து அபராதமும் விதிக்கலாம் என்றார் அவர்.
கடந்த 3 ஆண்டுகளில், மாதத்துக்குச் சராசரியாக அதுபோன்ற சுமார் 34 சம்பவங்கள் நடந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களில் பலர் ஒத்துழைப்பு வழங்கியதால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை!
மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் – 2025
கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!
குடிபோதை அறிகுறிகளைக் கண்டறியவும் குடிபோதையில் உள்ளவர்களைக் கையாளவும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையிலிருந்த பயணிகள் எத்தனை பேர்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உறுப்பினர் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சீ எழுத்துபூர்வ பதில் தந்தார்.
not allowed board train bus drunk 5338


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

சீன பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி அநுர!
