Thursday, March 13, 2025
HomeLocal Newsபேருந்துகள் - முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் - நாமல் கோரிக்கை!

பேருந்துகள் – முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் – நாமல் கோரிக்கை!

Namal demands relief for buses three wheelers 5003

பயணிகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு விதிமுறைகளுடன் அனுமதிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழிலாகும்.

அதேபோன்று ஒரு கலை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

அவற்றில் பயணிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

எனினும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேருந்து சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று மதியத்திற்கு பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Namal demands relief for buses three wheelers 5003

இதையும் படியுங்கள்

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் ‘புஷ்பா 2’

கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் 'புஷ்பா 2'
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular