bridge collapse south korea 4kills 6237
தென் கொரியாவில் அன்சியோங் (Anseong) நகரத்தில், சியோலைச் (Seoul) சுற்றியுள்ள பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று (25) காலை 9.50 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிகழ்ந்தது. இதில் 6 பேர் காயமடைந்தனர், அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் தென் கொரியர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது!
தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!
ஜீவன் தொண்டமான் காட்டிக் கொடுத்ததாக கூறியவர்கள் இன்று வாயடைத்து நிற்கிறார்கள்!
பாலத்தை ஆதரிக்கும் 50 மீட்டர் நீளமுள்ள ஐந்து எஃகு கட்டமைப்புகள், கிரேன் மூலம் உயர்த்தப்பட்டபோது அடுத்தடுத்து இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தீயணைப்பு முகமை, 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்களை மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பியுள்ளது.
கட்டுமானத்தை மேற்கொண்ட ஹூண்டாய் இன்ஜினீயரிங் நிறுவனம், விபத்துக்கு வருத்தம் தெரிவித்து, அதிகாரிகளுடன் இணைந்து புலனாய்வு செய்வதாக அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக் (Choi Sang-mok), மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து வளங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். 2020 முதல் 2023 வரை, தென் கொரியாவில் 8,000-க்கும் மேற்பட்ட தொழில்சார் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் அமைச்சக தரவுகள் கூறுகின்றன.
bridge collapse south korea 4kills 6237
இதையும் படியுங்கள்
மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!
கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!
சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

கொழும்பில் ஹோட்டலுக்குள் சடலம் மீட்பு
