Monday, February 10, 2025
HomeLocal News5000 ரூபாய் தாள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

5000 ரூபாய் தாள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

warning to those using 5000 rupee notes 3057

கம்பஹா – மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் மேலும் இருவருடன் முச்சக்கரவண்டியில் ஹிக்கடுவை நோக்கி பயணித்த நிலையில், மினுவாங்கொடையில் பொருட்களை கொள்வனவு செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முச்சக்கரவண்டியில் வந்த இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தலதாகம தொடக்கம் கம்பஹா வரையான மதுபான கடைகள், பல்பொருள் அங்காடிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது இந்த போலி நாணயங்கள் அப்பகுதிகளில் புழங்குவதால் 5000 நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

warning to those using 5000 rupee notes 3057
இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

பெண்ணொருவர் வெட்டிக்கொலை

பெண்ணொருவர் வெட்டிக்கொலை

இனவாதத்தை வேரிலேயே அழிக்க வேண்டும்

இனவாதத்தை வேரிலேயே அழிக்க வேண்டும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular