rice sales have dropped by up to 50 percent 3085
சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்ததுடன், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.
அதன்படி ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணங்கினர்.
அத்துடன், நாட்டிலுள்ள நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு குறித்த தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய, நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஜனாதிபதியிடம் கடந்த 06ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்!
ஆனால் சந்தையில் இன்னும் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிடைக்கும் அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கே விற்கப்படுவதாகவும் மக்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் போதியளவு நாட்டு அரிசி உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் கூறுகிறார்.
அரிசியின் விலையை அதிகரிப்பதற்காக சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
rice sales have dropped by up to 50 percent 3085

இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
தேசபந்துவுக்கு எதிரான மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்
