Landslide warning lifted some parts Sri Lanka 5230
இலங்கையின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (13) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில், வெலிமடை, பசறை, ஹாலிஎல, பதுளை, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர, குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரத்தோட்டை, உக்குவெல, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை மற்றும் ஹங்குரான்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கியூஷு தீவில் உள்ள மியாசாகி மாகாணத்திற்கும் ஜப்பானின் தெற்கு கொச்சி மாகாணத்திற்கும் எச்சரிக்கையை தூண்டியதாக நிறுவனம் கூறியது.
அறிவுறுத்தல் நீக்கப்படும் வரை உள்ளூர் மக்களை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
Landslide warning lifted some parts Sri Lanka 5230
இந்தநிலையில், தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால், அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் எட்டு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டான். இதுதவிர, அருகிலுள்ள நகரமான சாண்டானா டோ பரைசோவில் மற்றொரு உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நகரின் பெத்தானியா பகுதியில் உள்ள மலையின் ஓரத்தில் உள்ள ஒரு தெருவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவு அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அவரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர்.
Landslide warning lifted some parts Sri Lanka 5230


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
