iintensify rain in the north east 2828
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடையிடையே சிறிய மழை கிடைக்கும்.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும். எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 23ஆம் திகதி அதிகாலை மற்றும் காலை வேளைகளில் குளிரான வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் (3) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா இரட்டை கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல்!
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
iintensify rain in the north east 2828
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!
லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இப்படியே போனால் KDU பஸ் போன்று ஆகிவிடும்
