important decision regarding colombo airport 4936
இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் உள்ள எல்லைச் சுவரை அகற்றுவது தொடர்பில் மீளாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது.
சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப பிழையானாலும், சுவரில் விமானம் மோதி பெரும் விபத்து ஏற்படும் என, விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்கம் கூறுகிறது.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு மீளாய்வு செய்து மதில் சுவரை அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
அண்மையில் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமான நிலைய விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுவரில் விமானம் மோதியதில் 179 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
important decision regarding colombo airport 4936


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் ரத்து
