Sunday, February 16, 2025
HomeSports Newsதோனியுடன் 10 வருடங்களாக பேசாத ஹர்பஜன்!

தோனியுடன் 10 வருடங்களாக பேசாத ஹர்பஜன்!

harbhajan hasnt spoken dhoni 10 years 3832

தானும் எம்.எஸ் தோனியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பதை இந்திய அணியின் முன்னாள் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இரண்டு வீரர்களுக்கும் இடையில் முறுகல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இது வதந்தி என்றே கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் முதல் தடவையாக, இது உண்மையென்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது தகவல்களை வெளியிட்ட ஹர்பஜன் சிங், உண்மையில், தோனியுடன் சரியாக அரட்டை அடித்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை இந்தியன் பிரீமியர் லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் விளையாடிய போதும், அணி வீரர்களாக, விளையாட்டைப் பற்றிய களத்துக்கு மட்டுமே தமது பேச்சுக்களை மட்டுப்படுத்தி கொண்டதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

ஒருவேளை, தோனி தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் இருக்கலாம். எனினும் தம்மை பொறுத்தவரை காரணம் எதுவும் இல்லையென்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோனியிடம் இரண்டு முறை பேச முயற்சித்த போதும், எந்த பதிலும் வரவில்லை. எனவே மீண்டும் அவருடன் பேச முயற்சிப்பதை தவிர்த்து கொண்டதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தாம் ஒருவரை மதித்தால், அவர் தம்மை மதிக்க வேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

harbhajan hasnt spoken dhoni 10 years 3832

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

திருவண்ணாமலை: மூன்றே மாதத்தில் உடைந்த புதுப்பாலம் – கட்டுமானக் குறைபாடு காரணமா? என்ன நடந்தது?

திருவண்ணாமலை, பாலம்

‘ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்’: ‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் – ஏன் இந்த நிலை?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular