earthquake strikes near nepal border 4958
நேபாள எல்லைக்கு அருகிலுள்ள திபெத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பீகார், டில்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தகவல்படி, திபெத்தின் ஜிசாங்கில் காலை 6:35 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
ஜிசாங்கை நான்கு நிலநடுக்கங்கள் உலுக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது ரிக்டர் அளவுகோலில் காலை 5:41 மணிக்கு 4.2 ஆகவும், இரண்டாவது காலை 6:35 மணிக்கு 7.1 ஆகவும், மூன்றாவது 7:02 மணிக்கு 4.7 ஆகவும், நான்காவது 7:07 மணிக்கு 4.9 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, முங்கர், அராரியா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச், வைஷாலி, நவாடா மற்றும் நாலந்தா உள்ளிட்ட பீகாரின் பல பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
earthquake strikes near nepal border 4958


இதையும் படியுங்கள்
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதி விபத்து ஒருவர் பலி!
கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!
இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ்!
வாழைச்சேனையில் அதிரடி சுற்றி வளைப்பு : நால்வர் கைது!
யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்!
நாயால் ஏற்பட்டு விபத்து – சிறுவன் உயிரிழப்பு!
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்!

புது வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம்
